Monday 9 April 2012

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மு....

யாரும் இல்லாத என் இராத்திரிகள்
மறு நிமிடம் களைந்து போகும் என் கனவுகளில்
உன்னுடன் நான்.

உனக்காக காத்திருப்பதை விட என்
மரணத்திக்காக காத்திருக்கலாம்
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
நீ இல்லாத போது.

உனது பரிசம், காதல், முத்தம், அரவணைப்பு
அனைத்திற்காகவும் ஏங்கும் அனாதை குழந்தை தான் என் உள்ளம்.
என் இதயம் மட்டும் தினம் தினம் இரத்தக் கண்ணீர்
சிந்துகிறது... "நீ இல்லை"
கண் இமைக்கும் அந்த வினாடிகளில் மட்டும் உன் பிம்பம்
அதுவும் நிரந்தரம் இல்லை.

நான் உன்னை பிரியவில்லை
நீ என் அருகும் இல்லை. - ஆனால்
உன்னை யாசிக்கிறேன் - அதை விட
உன்னை நேசிக்கிறேன் - ஆனால்
என் முச்சு காத்தோடு மட்டும் தான் உன் உரசல்கள்..
நீ காத்தோடு தானே கலந்து விட்டாய்
என் உயிரில் கலந்தது போல...

என் உயிர் நீ இல்லை,
அர்த்தம் இல்லாதது தான் என் பயணம்
ஆனாலும் தொடர்கிறேன் உனக்காக,
உன் மறு ஜென்மத்துக்காக...
நம் குழந்தையாகவாவது நீ பிறப்பாய்
என்ற நம்பிக்கையில் உன்னை சுமக்கிறேன்
இனி உனக்கு மரணமே இல்லாத என் கருவறையில்..

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கருவாச்சி அம்மு....
I miss u... I love you chellam...

Friday 2 March 2012

முதல் பதிவு....

வாழ்க்கை எனும் வசந்தத்தை இழந்து விட்டு
ஒவ்வொரு நாளும் வருந்தி கொண்டு இருக்கும்
ஆயிரத்தில் நானும் ஒருவன்...

நினைவுகள் எனும் கொடிய விசத்தை
நெஞ்சில் சுமந்து கொண்டு இருக்கும்
ஆயிரத்தில் நானும் ஒருவன்....

நண்பர்கள் பலர் இருந்தும்
நெருக்கம் கொண்டாடமுடியாத
பாவிகளில்  நானும் ஒருவன் ...

தாய் தந்தை பாசத்தை
மறுத்து தனிமையை நேசிக்கும்
அரக்கர்களில்  நானும் ஒருவன்...

உயிராய் என்னுடன்  வாழ்ந்து
என்னை வருத்தி சென்ற
பைத்தியத்தை மறுக்க
எழுத்து எனும் மருந்தை
தேடி எடுத்து கொண்டு இருக்கிறேன்..